உத்தரகாண்ட்டில் நேற்று (ஆக.29) ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், அங்குள்ள ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், அம்மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 11 பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானதாகவும் கூறப்படுகிறது.




