பகுஜன் சமாஜ் கட்சி (BSP) தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி, தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்ட நிலையில், அவரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். ‘நான் போற்றும் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் மற்றும் கன்ஷி ராமின் இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல, தலைவர் மாயாவதியின் வழிகாட்டுதல் படி முழு மனதுடன் பணியாற்றுவேன்’ என்று எக்ஸ் தளத்தில் ஆகாஷ் பதிவிட்டுள்ளார்.




