வீட்டில் யாருக்காவது ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. யாருக்காவது ஏதாவது ஒரு பிரச்சனை வந்து பாடாய்ப் படுத்திக் கொண்டே இருக்கிறது. மருத்துவ செலவுகள் அதிகரிக்கிறது. என்பவர்களின் வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 முதல் 11 வரையிலான நேரத்தில் சென்று உப்பு வாங்க வேண்டும். பிறகு நேராக அந்த உப்பினை பெருமாள் கோவிலுக்கு எடுத்துச் சென்று பெருமாளின் கால் நடையில் வைத்துவிட்டு ஓம் நமோ நாராயணாய நமஹ என்ற மந்திரத்தை 9 முறை சொல்ல வேண்டும். பிறகு அந்த உப்பினை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து வணங்கிவிட்டு தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் உப்புடன் கலந்து தினமும் சமைக்கும் உணவில் சேர்க்க வேண்டும். இந்த பரிகாரத்தை மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள கஷ்டம் காணாமல் போய்விடும்.




