உயிர் காக்கும் மருந்துகள் மீது இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இனி, ஆயுள், மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. மருத்துவ உபகரணங்களுக்கு 5% வரி வசூலிக்கப்படும். இதுவரை இத்தகைய பொருட்களுக்கு 12% வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு புதிய வரி முறையை வரும் 22ஆம் தேதி அமலுக்கு கொண்டு வருகிறது.




