இன்றைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. அதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. குறைந்த பணம் செலுத்தி நீண்ட காலத்திற்கு சேமிப்பதன் மூலம் பெரும் தொகையை பாலிசி முடியும் காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும். சிறு தொகை முதலீடு செய்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பெரும் பலன் தரும் ஒன்றாகும். ஓய்வூதிய மியூச்சுவல் ஃபண்டுகள் ஐந்து வருட லாக்-இன் காலத்துடன் இயங்கி வருகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது ஜூலை 31, 2024 நிலவரப்படி ரூ. 1.45 லட்சமாக வளர்ந்திருக்கும் என்று AMC இன் இணையதளத்தில் உள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இதே முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன் செய்திருந்தால், 26.62 சதவீத வளர்ச்சியுடன் ரூ.2.03 லட்சமாக வளர்ந்திருக்கும். ஐந்து ஆண்டுகளில், அதே முதலீடு ரூ.2.74 லட்சமாக உயர்ந்திருக்கும். அதேபோல், ரூ.1 லட்சம் முதலீடு ஒரு பத்தாண்டுகளில் ரூ.3.86 லட்சமாக வளர்ந்திருக்கும். மார்ச் 31, 1996 அன்று திட்டம் தொடங்கப்பட்ட நேரத்தில் இதே முதலீடு செய்யப்பட்டிருந்தால், அது இப்போது கணிசமாக ரூ.3.41 கோடியாக வளர்ந்திருக்கும்.




