எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ
அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில்
எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டுசந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள்குடியேறுவாள்.
வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும்,
தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு
கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி
பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும். எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது.இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும்
இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும்,
நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத்
தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம்
செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும்,
நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது.
கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை
உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும்.
இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும்.
அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக்
கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.
கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை
கோ மாமிசத்துக்கு சமம்.
பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக்
கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்
கூடாது. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை
உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை
வெளியே கொட்டக் கூடாது.




