Oplus_16908288
ஓர் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேநீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், ‘அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
தினமும் அவர்கள் எழுந்து தேநீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள், ‘அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை…??? இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!!!” என்றாள்.
கணவன் அமைதியாகச் சொன்னான், ‘இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்” இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.
ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.
ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை…??….!!!
பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில்……???
வீரம் என்பது
பயப்படாத மாதிரி நடிப்பது
புத்திசாலித்தனம் என்பது
அடுத்தவனை முட்டாளாக்குவது
அமைதி எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு தெரியாமலிருப்பது
குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்போது மட்டும் தெரிவது
தானம் என்பது
வீட்டில் உள்ள பழையதை கொடுப்பது
பணிவு என்பது
மரியாதை இருப்பதுபோல் நடிப்பது
நல்லவன் என்பது
கஷ்டப்பட்டு நடிப்பது
தாழ்வு மனபான்மையின்றி பிறர் குறைகளை பூதக்கண்ணாடி வைத்து பார்க்காமல், கண்ணாடியில் நம் முகத்தை பார்த்து, நம்மிடம் உள்ள குறைகளை பார்த்து, திருத்தி வாழ்வோம்…!!




