இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் இந்த கொசு பிரச்சனை தான். இந்த கொசுவை விரட்ட பல யுக்திகளை நாம் கையாண்டாலும் ஜெயிப்பது என்னவோ அந்த கொசு தான். இந்நிலையில் கொசு பிரச்சினைகளில் இருந்து விடுபட ஒரு சிறந்த தீர்வைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் 250 மில்லி வேப்ப எண்ணையும் வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். மாலை 6:00 மணி அளவில் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அகல் விளக்கில் இந்த எண்ணையை ஊற்றி பஞ்சு திரி கொண்டு தீபம் ஏற்றுங்கள். கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது. இது உண்மை. இது உடலுக்கு மிகவும் உகந்தது. கொசு விரட்டி சுருள்கள் மருந்துகள் உடலுக்கு கேடு விளைவிப்பவை. இந்த எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இவ்வாறு தான் நமது முன்னோர்கள் கொசுவை விரட்டுவதற்கு யுக்தியை பயன்படுத்தினார்கள். முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு செயலுக்குப் பின்னரும் ஒரு அறிவியல் ரீதியான பயன் இருக்கிறது என்பது உண்மைதானே. அவர்கள் கூறிய அனைத்தையும் மூடநம்பிக்கை என்று இன்று உள்ள நாம் கூறுகிறோம். ஆனால் அவர்கள் கூறிய ஒவ்வொரு செயலுக்குப் பின்னரும் ஒவ்வொரு அறிவியல் ரீதியான உண்மையும் பயனும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.




