பொதுவாக , அனைவரின் வீட்டிலும் காலையிலும் மாலையிலும் இட்லி தோசையை தான் உணவாக உன்வார்கள்.
இதற்கு தினமும் சட்னி செய்வது நம் தாய்மார்களின் வழக்கம் . அனால் , ஒரே வகை சட்னி செய்தால் உண்பவர்களுக்கு சலித்து விடும் . விதவிதமாக செய்தாலோ தட்டில் இருக்கும் உணவு நொடிகளில் காணாமல் போய்விடும் .
அப்படி செய்ய , வேர்க்கடலை சட்னி மிகவும் சரியான தேர்வு . வெறும் சில பொருட்களை வைத்து இதை எப்படி செய்யலாம் என்று காண்போம் . இது மேலும் சாதம் , உப்புமா போன்ற உணவுகளுக்கு சிறந்ததாக இருக்கும் .
அதின் செய்முறை :
தேவையான பொருட்கள்:
- வேர்க்கடலை – 1/2 கப்
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- புளி – சிறிய துண்டு
- வரமிளகாய் – 2-3
- உப்பு – சுவைக்கேற்ப
- பூண்டு – 3 பல்
- தண்ணீர் – சிறிது
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
சட்னி செய்வது எப்படி?
வேர்க்கடலையை முதலில் நன்றாக வருத்து ஆற விட வேண்டும் .
அதன்பிறகு , அதை ஜாரில் போட்டு, துருவிய தேங்காய் , சிறிது புளி , வரமிளகாய் , உப்பு பொட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும் .
பூண்டை சேர்த்துகொண்டால் சுவை பல மடங்கு அதிகரிக்கும் . ஆகையால் பூண்டு பிடித்தவர்கள் அதையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும் .
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சிறிதளவு தண்ணீர் சேற்றுக்கொள்ளவும் . அடுத்து , தாளிப்பிற்காக வாணலியை சூடு செய்து அதில் என்னை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை , பெருங்காயம் தூள் சேர்த்து சூடானதும் சட்னியை ஊற்றி கலந்து கொள்ளவும் .
இதை உண்பதன் மூலம் உடம்பில் ஏற்படும் சளி மற்றும் இருமல் குணம்செய்யப்படும் . சுவையான வேர்க்கடலை சட்னி தயார் .




