மின்சாரத்துறை அமைச்சரும் கரூர் மாவட்ட எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி இன்று நடந்த சட்டப்பேரவையின்போது கேள்வி நேரத்தில் தனக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டு இருந்தார்.
அந்த நேரத்தில் , பவானி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. கருப்பணன் பேசிய போது,”சோலார் தகுடுகளோ தனியார் நிறுவனங்களில் தான் அதிகமாக தயாரிக்க படுகிறது. மேலும் , அவை 100 கிலோ வாட் திறனுடன் இருக்கின்றன . இதனை 120 கிலோ வாட் திறன் உடையதாக மற்ற வேண்டும் . இதனால் மின்சாரத்துறைக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது . இதற்கு மாப்பிள்ளை நிச்சயம் அனுமதி தர வேண்டும்.” என்று கூறினார்.
இதில் வேடிக்கையான விஷயமே அமைச்சர் செந்தில் பாலாஜியை அவர் மாப்பிள்ளை என்று கூறியது தான். கருப்பண்ணனின் இந்த பேசிச்சு சிரிப்பு சத்தத்தை சட்டப்பேரவை முழுவதும் ஒழிக்க செய்தது. மேலும் அதை தொடர்ந்து,” பழக்க தோஷத்தில் சொல்லிவிட்டேன்… சாரி… சாரி…” என்று மன்னிப்பும் கூறினார். இந்த வார்த்தை நமது மின்சாரத்துறை அமைச்சரை வெட்கப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது .




