சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
வாழைத்தண்டு மற்றும் வாழைப்பூ வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரை, சாம்பல் பூசணி ,சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது நம்மில் பலருக்கும் வந்து விட்டது. இந்நிலையில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. எனவே ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை மறந்து விடாதீர்கள். அதேபோன்று கீரை வகைகளான அரைக்கீரை, கருவேப்பிலை, புதினாக்கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை, ஆகிய கீரை வகைகளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினமும் உட்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிக்கும். நாவல் பழம் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டி அளவு சாப்பிடலாம் சர்க்கரை நோயாளிகள். பேரிச்சம் பழம் கொய்யாக்காய் பப்பாளி ஆப்பிள் விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். எனவே இவற்றையெல்லாம் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக உணவில் எடுத்துக் கொள்ளலாம்.




