சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக கூறப்படும் வழக்கில், நடிகை நிதி அகர்வால் இன்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக இதுவரை 21 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் மேலும் பல பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




