மறைந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடல் இன்று (ஆக.22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.
இதையடுத்து, அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.
சௌகார் ஜானகியின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




