ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் காயம்!

 

 

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இபாரகி, சிபா, சைதாமா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தலைநகர் டோக்கியோவில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Read Previous

“திமுக உறுப்பினர்கள் தேவையின்றி கூச்சலிடுகின்றனர்” – அமைச்சர் ரமேஷ்!

Read Next

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular