தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா (20). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் (ஜூன்.13) சண்முகப்பிரியா தான் தங்கியிருந்த அறையில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில், தோழி பேசாததால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.




