கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள தவெகவின் தேர்தல் வியூக அலுவலகமான ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமனார் ‘லாட்டரி’ மார்டினுக்கு சொந்தமானது. ஆளுங்கட்சியான திமுக தரப்பில் இருந்து அழுத்தம் வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.




