நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக சார்பில் பங்கேற்ற எம்.பி.க்களான டி.ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா, தொகுதி மறுவரையறை தொடர்பாக கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்வது தென்மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்றும், அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் பலவீனப்படுத்தப்படும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், இந்த விவகாரத்தில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா (INDIA) கூட்டணி சார்பில் நடைபெறும் கூட்டங்களை திமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.




