திருக்கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் உயர்வு!

 

 

திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான திருமணக் கடன் தொகையை உயர்த்துவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் (ஆக.21) புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், முதுநிலை திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் திருமணக் கடன் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

 

முதுநிலை அல்லாத திருக்கோயில் பணியாளர்களுக்கான திருமணக் கடன் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

 

இந்த புதிய அறிவிப்பு திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு திருமணச் செலவுகளில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

Read Next

இளம்பெண் மர்ம மரணம்: கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular