நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அடுத்த மாநாட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் 2026 பிப்ரவரி 7-ஆம் தேதி திருச்சியில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இது ‘நம் இனத்தின் திருவிழா’ என்பதால், அனைவரும் கூட வேண்டும் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, நவம்பர் 15-ஆம் தேதி ‘தண்ணீர் மாநாட்டையும்’ அவர் நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




