திருப்பூர் வடக்கு போலீசார் ரெயில் நிலையம் அருகே ரோந்து சென்றபோது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரக்சந்தா பரிதா (35) என்பவரிடம் 750 கிராம் புகையிலை பொருட்களும், கணேஷ் பிரசாத் ரோட் (28) என்பவரிடம் 3 கிலோ புகையிலை பொருட்களும் விற்பனைக்கு இருந்ததைக் கண்டறிந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.




