நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். அவரது இறப்புக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “அஜித்குமார் தாயாரின் மறைவு செய்தி அறிந்து பெருந்துயரமடைந்தேன். அன்னையை இழந்து வாடும் அஜித் குடும்பத்திற்கு ஆறுதல்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, சினிமா பிரபலஙக்ள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




