நாம் வாழும் வீட்டில் கண்டிப்பாக இருக்கக் கூடாதவை..!! அனைவரும் கண்டிப்பாக இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளவும்..!!
குறிப்பாகவே நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒரு சிலவற்றையெல்லாம் வீட்டில் செய்யக்கூடாது. என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அந்த வகையில் நாம் வாழும் வீட்டில் இருக்கக் கூடாதவை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் வாழும் வீட்டில் பூஜை அறை ஒருபோதும் இருட்டாக வைத்திருக்கக் கூடாது. மாய மந்திரம் செய்பவர்களை நம் வீட்டுக்குள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. பூஜை அறையில் தெய்வ படத்திற்கு பக்கத்தில் முன்னோர் படங்களை வைக்கக் கூடாது. வீட்டில் வைக்கப்படும் ஓவியத்தில் கட்டாயம் பாம்பு, ஆந்தை, வவ்வால், பன்றி, கழுகு சம்பந்தப்பட்ட ஓவியங்கள் ஒருபோதும் இருக்கவே கூடாது. காகித பூக்கள் மற்றும் காகித செடிகள் இவைகளை வீட்டில் வைப்பதை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. வீட்டில் காய்ந்த செடிகள் இருந்தாலும், அது எதிர்மறை வைப்ரேஷன்களை உருவாக்கும்.




