நேபாளத்தில் பேருந்து விபத்து: 13 பேர் பலி, எண்ணிக்கை உயரக்கூடும்..!!

நேபாளத்தின் சுதூரபச்சிம் மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு திருமணக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். அதிக பாரம் ஏற்றிச் சென்றதாலும், அழுத்தக் குழாய் வெடித்ததாலும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Read Previous

இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் காய்கள்..!! தினமும் சாப்பிடுங்க..!!

Read Next

பெருமாள் கோவில்களில் தீர்த்தமும் ,சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular