பணம் பத்து கட்டளைகள்.
1.ஆபத்து நேரத்தில் இல்லை மிக அவசியமான நேரத்தில் ஒருவர் செய்த பண உதவி கடலை விட பெரியது.அதற்கு கைமாறே கிடையாது. அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டாலும் கூட செய்த உதவியை திருப்பித் தரவே முடியாது.
2. கடனாக வாங்கிய பணத்தின் மதிப்பு அதை திருப்பி கொடுக்கும் போது மட்டுமே தெரியும்.
3.பணத்தை ஒருவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதன் மூலம் அவர் எத்தகைய பொறுப்புடையவர் என்பதையும் அவருடைய தரம் எத்தகையது என்பதையும் அறியலாம்.
4.பணத்தை செலவு செய்வதன் மூலம் இதுவரை யாரும் பணக்காரனாக ஆகியதில்லை. சேமிப்பதன் மூலம் மட்டுமே முடியும். பணத்தை ஒருபொருட்டாக கருதாதவர்கள் ஒன்று அது இல்லாதவர்களாக இருப்பர் இல்லை அதை சம்பாதிக்க முடியாத சோம்பேறிகளாக இருப்பர் இல்லை அவர்களிடம் உள்ள பணம் அவர்களுக்கு எந்த உழைப்பும் இல்லாமல் எளிதாக கிடைத்து இருக்கும்.
5.பணம் மகிழ்ச்சியை கொடுக்காது ஆனால் மகிழ்ச்சியை கொடுக்கும் எல்லாவற்றையும் அதன் மூலம் அடையலாம்.
6.கொடுத்த கடனை திருப்பி கேட்பது கொடுத்தவரின் உரிமை.வாங்கிய கடனை திருப்பிக்கொடுப்பது வாங்கியவரின் கடமை. வாங்கியவர் திருப்பிக் கொடுப்பது ஏதோ பெருந்தன்மையான செயல் அல்ல..
7. பணத்தை திருப்பி கேட்பது, வாங்கியவரை விட, அதை கொடுத்துவிட்டு கேட்பவருக்கு தான் அதிக மனஉளைச்சலை கொடுக்கும்.
8.பணத்தை நேர்மையான வழியில் கண்டிப்பாக சம்பாதிக்கமுடியும். அடுத்த வரை சுரண்டாமல் பணத்தின் பின் ஓடுவது எந்தவகையிலும் அதர்மம் ஆகாது.மனிதர்கள் மாறுவர் ஆனால் பணத்தின் மதிப்பு என்றுமே மாறாதது.
9.நீங்கள் யாருக்கும் பண உதவி செய்தே ஆக வேண்டிய அவசியம் கிடையாது. அடுத்தவரின் பொறுப்பற்ற தன்மைக்கு நீங்கள் பொறுப்பாக முடியாது.
10.கடன் அன்பை மட்டுமல்ல உறவுமுறைகளையே உடைத்து விடும். அதனால் தெரிந்தவரை விட வங்கியில் வாங்குவது Better. வேறு வழியில்லாமல் தெரிந்தவரிடம் கடன் வாங்க நேர்ந்தால் உரிய நேரத்தில் திருப்பி கொடுக்க முடிந்தால் மட்டுமே வாங்க வேண்டும் இல்லையெனில் கடன் வாங்குவதும் ,கொடுப்பதும் கூடவே கூடாது.




