பன்னீர் பட்டர் மசாலா இந்த மாதிரி ஒரு டைம் செஞ்சு பாருங்க..!! அம்பட்டு ருசியா இருக்கும்..!!

Oplus_131072

பனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

பனீர் – கால் கிலோ

பச்சை பட்டாணி – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 200 கிராம்

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

இஞ்சி – 2 விழுது

பூண்டு – 2 விழுது

சீரகம் – அரை தேக்கரண்டி

மல்லித்தழை – கால் கட்டு

வெண்ணெய் – 100 கிராம்

எண்ணெய் – ஒரு குழி கரண்டி

மல்லி தூள் – 3 தேக்கரண்டி

மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி

முந்திரி – 100 கிராம்

உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட வேண்டும். அது வெடித்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதங்கியதும் தக்காளி போட்டு வதக்க வேண்டும். அதோடு மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பனீர், பச்சை பட்டாணி எல்லா த்தையும் போட்டு வதக்கி வேக வைக்க வேண்டும்.

இத்துடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இறக்கும் பொழுது பட்டர், முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும்.

பனீர் தயார் செய்யும் முறை:

பாலை அடுப்பில் வைத்து பொங்கும் பொழுது தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால் பால் திரிந்து வரும். அதை ஒரு சுத்தமான துணியில் வடிகட்டி அதை ஒரு தட்டின் மீது துணியோடு வைத்து

அதன் மேல் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அழுத்தினால் சமமாக வரும். இதை பிரிட்ஜில் வைக்க வேண்டும். குறைந்தது 2 மணி நேரம் பிரிட்ஜில் இருக்க வேண்டும்.

பின்னர் அதை வெளியில் எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.

 

Read Previous

மின்வாரிய அதிகாரிக்கு ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்து..!! தீவிர விசாரணை..!!

Read Next

அஜித் குமார் குறித்து பேசிய பிரபல நடிகை..!! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular