கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடும்ப தகராறு காரணமாக பெற்றோருடன் வசித்து வந்த 24 வயது இளம்பெண், தனது 2½ வயது பெண் குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். குழந்தை உயிரிழந்த நிலையில், குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் கள்ளக்காதலனான திமுக இளைஞர் அணி நிர்வாகி பெரியநாயகம் (40) என்பவர், குழந்தையை பாலியல் தொந்தரவு செய்ததும், அதனால் குழந்தை இறந்ததும் தெரியவந்துள்ளது.




