பெண் பிள்ளை பெற்றவர்கள் என்றும் பாக்கியம் செய்தவர்கள் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்..!! படித்ததில் பிடித்தது..!!

ஒரு கிராமத்தில் ஒரு வயதான செல்வந்தர் இறந்து விட்டார்!!.

அவரை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல தயாராகி கொண்டு இருக்கும் அந்த வேளையில் !!

ஒருவர் திடீர் என்று குறுக்கிட்டு !

பிணத்தை எடுக்க விட மாட்டோம்!! எனக்கு இவர் 10 லட்சம் பணம் கடன் கொடுக்க வேண்டியிருக்கு. அதை யார் கொடுப்பார்கள் என்று எனக்கு தெரிய வேண்டும் என்று தடுக்க!

அங்கு இருந்த மூன்று மகன்களும் ” ஐயா !! எங்களுக்கு இந்த கடன் பற்றி தெரியாது!! மேலும் அவர் இறந்த பின் , அவர் வாங்கிய கடனை நாங்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்!! என்று சொல்லி கையை விரித்து விட!!

அவரோ காசு வராமல்!! பிணம் சுடுகாடு செல்லாது என்று சொல்ல!!

திடீர் என்று கூட்டத்தில் ஒரு பெண்!!

” ஐயா !! நான் அவருடைய மகள்,!! இந்த நகைகளை வைத்து கொள்ளுங்கள் இது 5 லட்சம் பெறும்!! எல்லாம் என் தந்தை என் திருமணத்திற்கு கொடுத்தது!!

இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் மீதி பணத்தை கொடுத்து விடுகிறேன்!! தயவு செய்து என் அப்பாவை நல்லடக்கம் செய்ய விடுங்கள்!! .

என்று கெஞ்சி கதற!!

அவரோ!! தாயி என்னை மன்னிக்கவும்!!

உண்மையில் நான்தான் உன் அப்பாவிற்கு 10 லட்சம் கொடுக்க வேண்டும்.

உன் தந்தை ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார்!

நான் இறந்த பின்னும் யார் என் மேல் மிகவும் பாசம் அதிகம் வைத்து இருக்கிறார்களோ!!

அவர்களுக்கு இந்த பணத்தை கொடுத்து விட சொன்னார்!!

இந்தாம்மா!! அந்த 10 லட்சம் உன் தந்தை ஆத்மா!! சாந்தி அடையட்டும் !! என்றார்!!

பெண் பிள்ளை பெற்றவர்கள் என்றும் பாக்கியம் செய்தவர்களே!!

Read Previous

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பிபேக் டெப்ராய் காலமானார்..!!

Read Next

வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம்..!! கண்ணீர் வர வைக்கும் பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular