பெரம்பலூரில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு..!! 20-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

 

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள நகர காவல் நிலையம் எதிரே இயங்கி வந்த டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், டீக்கடைக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்களும் வெடிவிபத்தில் சிக்கி கடுமையாகச் சேதமடைந்தன. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் பணியினர் மற்றும் அதிகாரிகள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திடீரென ஏற்பட்ட இந்த வெடிவிபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

அதிமுகவுக்கு குட்பை..!! தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன்..!!

Read Next

மாலை நேர சட்டப்பேரவை கூட்டம் ரத்து..!! சபாநாயகர் முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular