பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6 பேர் உயிரிழப்பு, 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

 

 

தென் அமெரிக்க நாடான பெருவின் ஜுனின் (Junín) பிராந்தியத்தில் சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட 5.1 மற்றும் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர். களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட 48 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. மேலும், 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசரக்கால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read Previous

சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!!

Read Next

தவெக எம்எல்ஏ விஜயகுமாரின் மனைவிக்கு அமைச்சர் என். ஆனந்த் அஞ்சலி.. குடும்பத்தினருக்கு ஆறுதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular