தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே தனியார் பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் (26) மற்றும் இசக்கிமுத்து (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




