தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை என்று கனிமவள இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு பொதுப்பணித்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட விலையே தற்போதும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.




