தஞ்சாவூரில் விசிக போராட்டத்தின் போது, தன்னை அறைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் பதிலுக்கு அறைந்ததாக கூறப்படும் ஆகாஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தின் போது அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முக்கிய நோக்கமாக இருந்ததாக தஞ்சை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் சம்பவத்தில் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




