மனக்கஷ்டம் பணக்கஷ்டம் போக்கும் வெற்றிலை தீர்த்தம்..!!

Oplus_131072

மனக்கஷ்டம் பணக்கஷ்டம் போக்கும் வெற்றிலை தீர்த்தம்…..

வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருந்தால் ஒருசில தாந்திரிக பரிகாரங்கள் மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்.

அந்தவகையில் எளிதாக பிரச்சனையை தீர்க்கும் ஒரு செயல் முறையைப் பார்ப்போம். இந்த முறையை பயன்படுத்தினால் எந்த கெட்ட சக்தியும் வீட்டை அனுகாது.

வீட்டில் பூஜை அறையில் கடவுளை வணங்கும் போது, அவசியம் வெற்றிலையை பயன்படுத்த வேண்டும். வெற்றிலை வைத்து வணங்கும் போது பல நண்மைகள் உண்டாகிறது என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இதில் வெற்றிலை தீர்த்தம் மிகப்பெரிய பலனை தரும். வெற்றிலை தீர்த்தத்தை தயாரிக்கும் முறையை பற்றி பார்ப்போம்.

வெற்றிலையோடு நன்னாரிவேர் 2 துண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பச்சைகற்பூரம் ஒரு சிறிய துண்டு, ஜவ்வாது தூள் ஒரு சிட்டிகை, இவை அனைத்தையும் சேர்த்து, வீட்டில் பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுத்தமான நீரை ஊற்றி அதில் மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் போட்டு விடவேண்டும். நறுமணம் மிக்க இந்த தண்ணீருக்குள், வெற்றிலைக்காம்பு மேல் பக்கத்தில் இருக்கும் படி, வெற்றிலை ஒன்றை தண்ணீரில் மூழ்க வைத்து விடுங்கள்.

இதை எப்போது செய்ய வேண்டும்? வெள்ளிக்கிழமை காலை மகாலட்சுமி பூஜை செய்யும்போது இந்த சொம்பை

தயார் செய்து, மகாலட்சுமி தாயாரின் முன்பு வைத்து, பூஜை செய்ய வேண்டும்.

மாலை பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அந்த சொம்பில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து, அந்த வெற்றியினால் உங்கள் வீட்டு மூலைமுடுக்குகளில் தெளித்து விட வேண்டும்.

சமையலறை, படுக்கையறை வரவேற்பறை இப்படி உங்கள் வீட்டில் எவ்வளவு அறைகள் இருக்கின்றதோ! அந்த அறைகள் முழுவதிலும் இந்த தண்ணீர் படும் அளவிற்கு தெளித்து விட்டீர்கள் என்றால், மூதேவி உங்கள் வீட்டில் வாசம் செய்யவே மாட்டாள்.

நறுமணமிக்க இந்த தீர்த்த மானது வீட்டில் சந்தோஷத்தை நிலையாக வைத்திருக்கும். பணக்கஷ்டம் ஏற்படாது. மனக் கஷ்டம் ஏற்படாது. சண்டை சச்சரவு ஏற்படாது. நோய் நொடிகள் இல்லாத வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு இது ஒரு சிறந்த முறையாகும். இந்த நீரில் கலக்கப்படும் பொருட்களுக்கு தீய சக்திகளையும், துர் எண்ணங்களையும் அழிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது. இதன்கூட மகாலட்சுமிக்கு உகந்த வெற்றிலை சேரும்போது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.

புதிய தொழில் துவங்கும்போதும், தொழில், வியாபாரம் நடைபெறும் இடங்களில் இந்த நீரை தெளித்து லட்சுமி பூஜை செய்தால் மிகுந்த லாபம் கிடைக்கு, தொழில் மற்றும் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெறும்…

 

Read Previous

இட்லி பூ என அழைக்கப்படும் வெட்சி பூவின் மருத்துவ பலன்கள்..!!

Read Next

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து..!! குறட்டை உண்டாக காரணம் என்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular