மழைக்காலங்களில் ஒருபோதும் இதையெல்லாம் செஞ்சுடாதீங்க..!! உயிருக்கே ஆபத்து விளைவிக்கும்..!!
மழைக்காலங்களில் ஒரு சில செயல்களை எல்லாம் செய்யக்கூடாது என்று நம் பெரியோர்கள் கூறுவார்கள். குறிப்பாக மின்சாரம் சம்பந்தப்பட்ட சுவிட்சுகளையும் அல்லது கம்பிகளையோ தொடக்கூடாது ஏனென்றால் மழைக்காலங்களில் ஷாக் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பெரியோர்கள் கவனமாக இருக்க செல்வார்கள். குறிப்பாக மழைக்காலங்களில் இடி இடிக்கும் பொழுது போன், டிவி போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் ஆஃப் பண்ண சொல்லுவார்கள். இந்த வகையில் மழைக்காலங்களில் சில செயல்களை எல்லாம் செய்யக்கூடாது. அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
மழைக்காலங்களில் ஒரு பொழுதும் பச்சை மரங்களுக்கு அடியில் நிற்கவோ அல்லது உட்காரவோ அல்லது தூங்கவோ கூடாது.
மின்சார கம்மிகள் அருந்து விழுந்து இருந்தால் அவற்றின் அருகே செல்லாமல் உடனே மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மழை பெய்து வரும் போது குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதை முற்றிலுமாக நாம் தவிர்க்க வேண்டும்.
இடி மின்னல் ஏற்படும்போது டிவி, கணினி, செல்போன், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது.
குறிப்பாக குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளில் கிருமி தொற்று மழைகாலங்களில் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதால் அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் நல்லது.
மலையின் போது வீட்டு சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது மழைக்காலங்களில் மிகவும் நல்லது.
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மழைக்காலங்களில் மின்கம்பம் அருகே கால்நடைகளை கட்டக்கூடாது.
மழைக்காலங்களில் இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.




