Oplus_16908288
விருதுநகரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான பள்ளி சீருடையை மாற்றுவது தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். சிறுமிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் பள்ளி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் புதிய சீருடை வடிவமைப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பல்வேறு வடிவமைப்புகளை ஆய்வு செய்த அமைச்சர், மாணவிகளுக்கு எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் சீருடையை தேர்வு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், புதிய சீருடை வடிவமைப்பு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




