சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் அமைப்பு ரீதியான அதிரடி மாற்றங்களைச் செய்ய அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது 78 ஆக உள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 115 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரின் கீழ் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 2 முதல் 4 ஆகக் குறைக்கப்படவுள்ளதோடு, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குக் கட்சிப் பதவிகளில் முக்கியத்துவம் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.




