தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
500 யூனிட்டுக்கு கீழ் மின் நுகர்வு கொண்ட வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, மறைமுகமாக ஒரு யூனிட்டுக்கான மின் கட்டணத்தை ரூ.4.50 ஆக இரட்டிப்பாக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழகம் முழுவதும் தொடர் மின்வெட்டு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டதாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




