முதுகு வலிக்கு முடிவுகட்டணுமா?.. அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்..!!

கால்சியம் என்பது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது தசை சுருக்கங்கள், நரம்பு பரிமாற்றங்கள் மற்றும் பிற உடல் செயல்பாடுகளுக்கும் முக்கியமானது.

எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உடலுக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாததாகிறது.

 

நீங்கள் முதுகுவலியை அனுபவித்தால், உதவக்கூடிய பல சிகிச்சைகள் உள்ளன. பல தசாப்தங்களாக, மக்கள் முதுகுவலியை நிறுத்த வலி நிவாரணிகள் அல்லது அறுவை சிகிச்சைகளை தேர்வு செய்ய வேண்டியிருந்தது.

 

 

 

 

 

எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், முதுகுவலியைப் போக்கவும் உங்கள் உணவில் இருந்து போதுமான கால்சியம் பெறுவது முக்கியம்.

 

கால்சியம் நிறைந்த உணவுகள்

 

 

பால் பொருட்கள் (மாடு, ஆடு, செம்மறி ஆடு) மற்றும் வலுவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான பால்கள் (பாதாம், சோயா, அரிசி சீஸ்தயிர் கால்சியம் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு இளம் பச்சை சோயாபீன்ஸ் டோஃபு, கால்சியம் சல்பேட்டுடன் தயாரிக்கப்படுகிறது.

பாதாம் இலை கீரைகள் ஆகியவறில் கால்சியம் செறிந்து காணப்படுகின்றது. ஆண்களைவிட பெண்களுக்கே கால்சியம் குறைப்பாடு அதிகமாக இருக்கிறது.

 

 

தினசரி பால் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கின்றது.

 

 

இதன் மூலம் எலும்புகள் வலுப்பெருகின்றமையால் முதுகு வலிக்கு நிவாரணம் கொடுக்கிகன்றது. பால் பொருட்களை எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள் கால்சியம் நிறைந்த சோயா அல்லது சோயா பாலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

 

மேலும் முதுகு மற்றும் மூட்டுகளில் வலி இருந்தால், பச்சை காய்கறிகளை தினனரி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

 

கீரை மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த காய்கறிகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 

இதனுடன், எலும்புகள் மற்றும் தசைகள் பலம் பெற்று இதன் மூலம் முதுகு வலிக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கின்றது.

 

 

 

 

நெத்தலி மீன்களில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால் இதனை அதிகளவில் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் உறுதியாக்கப்பட்டு முதுகு வலி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

Read Previous

கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா?.. வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நிகழும் அதிசயம்..!!

Read Next

தக்க சமயத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு கை கொடுக்கும் வெந்தயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular