வங்கதேசத்தில் நேற்று மாலை 5.43 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவான லேசான நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக ஆழம் இல்லாமல் உருவாகும் நிலநடுக்கங்களால் பெரும்பாலும் கட்டிடங்களுக்கு அதிக சேதங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த செப்., 21ஆம் தேதி ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.




