தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்த சூழலில், வரும் 2-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறையினர் விடுமுறை எடுக்க கூடாது என தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். வரும் 4-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்படும்.




