Oplus_131072
வாழ்க்கை பற்றிய மிகவும் சோகமான உண்மைகள் யாவை?
1.நமக்கும் வயதாகும் .
2.கை கால்கள் நோகும்.
3.எவ்வளவு பணம் இருந்தாலும் யாரிடமும் வலிகளையோ வேதனைகளையோ துளி அளவு கூட மாற்றி விட முடியாது.
4.கஷ்டங்கள் வரும் போது தான் கடவுள் நினைப்பு வரும்.
5.பணநெருக்கடி வரும் போது தான் வீணாக செலவழித்தது ஞாபகம் வரும்
6.மருத்துவமனையில் இருக்கும் போது தான் ஆரோக்கியத்தை பேணாதது புரியும்.
7.அழும் போது தான் ஆறுதல் சொல்ல ஆட்களை சம்பாதிக்கவில்லை என்பது அறிய வரும்.
8.கட்டிலில் முடங்கும் போது தான் பெரிய வீட்டைக் கட்டி உழைப்பை வீணாக்கியது புரியும்.
9.நல்லது செய்தது திரும்ப வராவிட்டாலும் நாம் செய்த கெட்டவை கண்டிப்பாக திரும்பி வந்து அடிக்கும்.
10.மரணம் வந்தே தீரும்.




