Oplus_131072
பிறவிக்குணம்…
பிடிவாதம்…
சுயமரியாதை… இதெல்லாம் யாருக்காக? உன் சொந்த ரத்தத்திற்காகத் தானே!
உன் மனைவியிடம் தோற்பது அவமானமா? உன் பிள்ளைகளிடம் இறங்கிப் போவது தாழ்வா? உன் உடன்பிறப்பிடம் பேசுவது கௌரவக் குறைச்சலா?
‘நான்’ என்ற அகந்தையை வாசல் செருப்போடு கழற்றி விடு!
சற்று மாறித்தான் பாரேன்… நீ இறங்கி வருவதால் குறைந்து போகப் போவது உன் தலைக்கனம் மட்டுமே… கூடப் போவது உன் மகிழ்ச்சி!
விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை… கெட்டுப்போகும் உறவை விட்டுக்கொடுப்பவனால்தான் ஒட்ட வைக்க முடியும்!




