தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏர் இந்தியா நிர்வாகம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று முதல் நிறுவனத்தின் அனைத்து விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானிகள் பணியில் ஈடுபடுவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. பரிசோதனையில் விதிமீறல் கண்டறியப்படும் விமானிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.




