வேலையின்மையைக் காரணம் காட்டி தந்தை என்ற பொறுப்பிலிருந்து பின்வாங்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தனது இரு பிள்ளைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 பராமரிப்புத் தொகை வழங்கக் கோரிய கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஒருவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது. பிள்ளைகளை வளர்ப்பது தந்தையின் சட்டப்பூர்வ கடமை என்றும், பெற்றோரின் பிரச்னையால் பிள்ளைகளைப் புறக்கணிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.




