கேரளம் மாநிலம் கொச்சி நகரில் தேவாரா – வெலிங்க்டன் தீவு இணைக்கும் பாலத்தில், லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் இருக்க பாலத்தின் சுற்றுச் சுவரின் மீது ஓட்டுநர் மோதினார். சினிமா காட்சிகளைப் போல பாதி அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்து ஓட்டுநர் அனில் குமார் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டார்.




