திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே நிலத்தகராறு புகாரில் தாய் – மகனை வீடு புகுந்து போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. அறநிலையத்துறை இடத்தில் வீடு கட்டி வரும் ஒருவரை தங்கபாண்டி குடும்பத்தினர் தடுத்ததாகவும் இதற்காக தங்கபாண்டி மீதே போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு வந்த போலீசார் தங்கபாண்டியின் மனைவி, மகனை தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




