தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று (மே 16) சந்திக்கிறார். கொறடா உத்தரவை மீறி சட்டப்பேரவையில் தவெக அரசு பெரும்பான்மை நிரூபிக்க 25 பேரும் வாக்களித்துள்ளதாக புகார் அளிக்க உள்ளார். அதே போல், இபிஎஸ் நியமித்த கொறடாவின் உத்தரவு தங்களை கட்டுப்படுத்ததாது என்று எஸ்.பி.வேலுமணி தரப்பு தெரிவித்துள்ளது.




