கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி மயிலம் MLA சிவக்குமார், மேட்டூர் MLA சதாசிவம் மற்றும் தருமபுரி MLA வெங்கடேஸ்வரன் ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இவர்கள் நீக்கப்பட்டது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கட்சி தலைமை பதவிக்கு ராமதாஸ்-அன்புமணி இடையே கருத்து வேறுபாடு உள்ள இந்நிலையில் இச்சம்பவம் கட்சிக்குள் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.




