துணையிருக்கும் போதே துணை தேடிக்கொண்டு செல்லும்.. ஒரு சில பெண்களுக்கும்.. ஆண்களுக்கும் இந்த பதிவு..!!

Oplus_131072

 

எண் கணவன் கெட்டவன், குடிகாரன் ,வேறு
ஒருத்தியுடன் தொடர்பில் உள்ளான் என்று
கூறிவிட்டு இன்னொருவனுடன் செல்லும்..!!

போது அங்கு சென்று சில நாட்டளிலே
இதைதான் மீண்டும் அனுபவிப்போம்
என்பதை உணர மறந்து விடுகிறாள்….!!

அவன் எப்படி வேண்டுமானலும்
இருந்து விட்டு போகிறான்…!!

தான் பெற்ற பிள்ளை பெற்றோர்களை
நம்பியே வளர்கின்றன…!!

எனக்கு என் அம்மா இருக்காள்,அப்பா
இருக்கார் வேறு என்ன எனக்கு வேண்டும் என்று..

நாம் இல்லாவிட்டால் பிள்ளைகள்
என்றுமே அநாதைதான்..

சைகில் ஓட்டும் போதும்கூட தன் நம்பிக்கையில்
ஒரு பிள்ளை ஓட்ட மாட்டான் நான் விழுந்தாள்
அப்பா?இருக்கார் தூக்கிவிட அம்மா இருக்காள் என்றுதான் நம்புவான்..!!

எத்தனையோ பெண்கள் தன் குடும்பத்திற்காக
வெளிநாடுகளுக்கு சென்று கஷ்ட படுகின்றன….

தான் தடம் மாறினால்
தன் குடும்பம் தடுமாறி விடுமே என்று
பயந்தே தன் வாழ்க்கையை வாழ்கின்றன…

ஒரு பிள்ளை அப்பாவை கூட
பெரிதளவாய் தேடமாட்டான்…

பள்ளிக்கு சென்று வரும் போதே
அம்மா என்றுதான் ஓடிவருவான்….

தாய் இல்லை என்றால் அக்குடும்பமே
சீரழிந்து விடும் பிள்ளை சீரழிந்து விடுவான்…

ஒரு தாய் இறந்த பின்பு பிள்ளை
அனுபவிக்க வேண்டிய துயர்கங்களை
இருக்கும் போதே அனுபவிக்க விடாதீர்கள்..

ஒருசில பெண்களும், ஆண்களும்…!!

 

Read Previous

குளிர் காலமும் மூட்டு வலியும்..!! காரணங்களும் தீர்வுகளும்..!!

Read Next

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை..!! அதை கற்க 5 சுலபமான வழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular