ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (ஜன.12) காலை ஏவப்பட்ட இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தோல்வியில் முடிந்தது. ராக்கெட்டின் முதல் 2 நிலைகள் சரியாக செயல்பட்ட நிலையில், 3-வது நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதையில் விலகல் ஏற்பட்டுள்ளது. இதனால், செயற்கைக்கோள்களை திட்டமிட்ட புவிவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. தற்போது கோளாறுக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.




